search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகளுடன் பெண் மாயம்"

    அறந்தாங்கியில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளுடன் பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள துரையரசபுரம், புதுகாலணியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) இவர் வெளியூரில் தங்கியிருந்து பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (வயது 26). இவர்களுக்கு புவனாட்சி(8), கிருத்திகா(4) என்ற 2 மகள்களும் அருள்பிரகாஷ் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

    பிரபாகரனுக்கும் ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு ராதிகா கணவரிடம் கோபித்து கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார். பின்னர் கடந்த மாதம் 27-ந் தேதி கணவர் வீட்டிற்கு வந்தார்.

    28-ந் தேதி வீட்டின் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 3 குழந்தைகளின் ஆதார்கார்டு ஆகியவற்றை எடுத்து கொண்டு தனது 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    அப்போது பிரபாகரன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் மனைவி குழந்தையுடன் மாயமானது தெரியவந்தது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.

    பிரபாகரன் இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து 3 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.

    2 குழந்தைகளுடன் மாயமான பெண், போலீசில் தஞ்சம் அடைந்ததால் போலீசார் அப்பெண்ண பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே மாத்தூர் கோழிவிளையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவரது மனைவி சுதா (31). இவர்களுக்கு ஒரு மகன்,  மகள் உள்ளனர்.

    ராஜேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சுதா கணவருக்கு போன் செய்து பேசினார். அப்போது தனக்கு கடன் இருப்பதால் ரூ.5 லட்சம் பணம் கொண்டுவரும்படி கூறினார். அதன்பின்பு அவர் 2 குழந்தைகளுடன் மாயமாகி விட்டார். இதுபற்றி உறவினர்கள் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து சுதா மற்றும் அவரின் குழந்தைகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் தனது மகனை விட்டுசெல்லப்போவதாக சுதா, அவரது கணவருக்கு போனில் தெரிவித்தார். அவர் உறவினர் மூலம் இத்தகவலை போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் மார்த்தாண்டம் சென்ற போது அங்கு சுதா வரவில்லை. 

    அதற்கு பதில் அவர் தக்கலை பஸ் நிலையத்தில் நேற்று மாலை தனது மகனை விட்டுவிட்டு சென்றார். போலீசார் அந்த சிறுவனை மீட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இரவு திருவட்டார் போலீசில் தஞ்சம் அடைந்தார். போலிசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று கூறினார். இதையடுத்து போலீசார் சுதாவின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் சுதாவை ஒப்படைத்தனர்.
    ×